இந்தியாவில் மீண்டும் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு? பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை!
இந்தியாவில் தற்போது 1.5 லட்சத்தை தாண்டி இருக்கும் கொரோனா தினசரி பாதிப்பை கருத்தில் கொண்டு நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.9) மாலை முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார்.
ஆலோசனை கூட்டம்
நாடு முழுவதும் கட்டுக்கடங்காமல் பரவி கொண்டிருக்க கூடிய கொரோனா 3ம் அலைப்பரவல் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மாநிலங்கள் தோறும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலங்களில் நிலவும் கொரோனா புதிய பாதிப்புகளை கவனத்தில் கொண்டு இரவு ஊரடங்கு உத்தரவு, வார இறுதி ஊரடங்கு உள்ளிட்ட சில கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? முதல்வர் நாளை ஆலோசனை!
இதற்கிடையில் படிப்படியாக உயர்ந்து வந்த கொரோனா தினசரி மொத்த பாதிப்பு மீண்டுமாக 1.5 லட்சத்தை தாண்டி பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தினசரி 2 ஆயிரத்தை தாண்டி பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நோய் தொற்று பரவல் இன்னும் அதிகரிக்கும் என்று மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த மீனா ஹேமா – பாண்டிச்சேரி விசிட்!
இந்நிலையில் இந்தியாவில் தினசரி பதிவு செய்யப்பட்டு வரும் 1.5 லட்சம் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.9) மாலை 4.30 மணியளவில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார். இப்போது மத்திய சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் நடைபெற இருக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில், நாடு தழுவிய கொரோனா பரவல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது.