தமிழகத்தில் மீண்டும் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? விரைவில் அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரங்களாக புதிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக மீண்டும் முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முழு ஊரடங்கு
கொரோனா பரவலின் 4ம் அலைப்பரவல் தமிழகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னை, கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவல் பாதிப்புகள் வேகமெடுத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பரவலால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2000ஐ கடந்துள்ளது. இதனால் பொது மக்கள் அனைவரும் மீண்டுமாக முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும் இந்த நடவடிக்கையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Exams Daily Mobile App Download
இது தவிர அடுத்து வரும் நாட்களில் கொரோனா பாதிப்புகள் உச்சம் தொட்டு மீண்டும் குறையத்துவங்கும் என்று சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் தீவிரமாக பரவி கொண்டிருக்கும் நோய் பரவல் பாதிப்புகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் நேற்று (ஜூலை 1) முக்கிய ஆலோசனை கூட்டத்தை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தின் போது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்தும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் நோய் பரவலை கட்டுப்படுத்த தனியார் அலுவலகங்கள், வணிக வளாகங்கள், பொழுது போக்கு மையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்தும் விவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்