ஜூன் 1 முதல் முழு ஊரடங்கு தளர்வுகள்? முதல்வர் இன்று ஆலோசனை!!
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு மே 31 ஆம் தேதியுடன் முடிவடையும் என்பதால், ஜூன் 1 முதல் தளர்வுகளை அறிவிப்பது குறித்து முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
ஊரடங்கு தளர்வுகள்:
கொரோனா 2 ஆம் அலை தாக்கம் காரணமாக டெல்லியில் கடந்த ஏப்ரல் மாத இறுதியிலிருந்து ஊரடங்கு நடைமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. டெல்லியை பொருத்தளவு கொரோனா அலை தாக்கத்தால் அதிகம் பாதிப்படைந்த மாநிலங்களில் ஒன்றாக இருந்தது. சரியான தடுப்பு நடவடிக்கைகளாலும், முறையான ஊரடங்கு நடைமுறையாலும் டெல்லியில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,072 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளதால், ஏப்ரல் மாதத்தில் 31 சதவீதமாக இருந்த கொரோனா பாதிப்பு விகிதம் 1.53 சதவீதமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று (மே 28) வெளியிடப்படும் என எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் டெல்லியில் இன்று (மே 28) நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முக்கிய அதிகாரிகள், லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தலைமைச் செயலாளர் மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு? மாநில அரசு திட்டம்!
முன்னதாக ஊரடங்கு காரணமாக மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இனிமேலும் ஊரடங்கை நீட்டிக்க முடியாது என முதல்வர் தெரிவித்திருந்தார். அந்த வகையில் டெல்லியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டால், முதலாவதாக மார்கெட்டுகள் திறக்கப்படும். தவிர மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் விரைந்து நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.