ஜூலை 12 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு!
கோவாவில் மாநிலம் தழுவிய முழு ஊரடங்கு உத்தரவானது ஜூலை 5 வரை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த கட்டுப்பாடுகளை மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த பொது முடக்க காலத்தில் அத்தியாவசிய கடைகளை திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளாக கடந்த மே மாதம் முதல் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோவா முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த மாநில அளவிலான ஊரடங்கு உத்தரவு ஜூலை 5 ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஜூலை 12 வரை மீண்டும் ஒரு வார காலத்திற்கு கூடுதல் தளர்வுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவாவில் ஏறத்தாழ மூன்று மாதங்கள் களித்து முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதமாக குறைந்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – CEA வழங்க புதிய வழி!!
அந்த வகையில் கோவாவில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளின் படி, ‘ஜூலை 12 ஆம் தேதி காலை 7 மணி வரை மாநிலம் தழுவிய முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய கடைகள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். மேலும் வெளிப்புற விளையாட்டு வளாகங்கள் மற்றும் அரங்கங்களும் திறக்கப்படலாம்’ என கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த்தின் ட்வீட் தெரிவிக்கிறது.
TN Job “FB Group” Join Now
கடந்த வாரத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த முழு ஊரடங்கில் பல்வேறு வகையான வணிக செயல்பாடுகளுக்கு அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. எனினும் இவற்றுக்கான கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுபக்கத்தில் கடந்த மூன்று மாதங்களில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு விகிதமானது 5 சதவீதத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. கோவாவில் கடந்த 24 மணி நேரத்தில் 183 புதிய பாதிப்புகளும், 2 இறப்புகளும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.