ஜூன் 21 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு!

0
- புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு!
- புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு!
ஜூன் 21 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு!

கர்நாடகா மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கில் இருந்து பெரும்பாலான இடங்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், 15% க்கும் அதிகமான பாதிப்பு விகிதம் கொண்ட 11 மாவட்டங்களில் அதே கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கர்நாடகா மாநிலத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவானது, ஜூன் 21 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் அதிகமுள்ள 11 மாவட்டங்களில் மட்டும் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும், மீதமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதலமைச்சர் மாநில ‘இளைஞர் விருது’ – விண்ணப்பங்கள் வரவேற்பு!

மறுபுறத்தில் மாநில அரசின் அறிவிப்பின்படி, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட இடங்களிலும் இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவானது வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் திங்கள் கிழமை 5 மணி வரை செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் கர்நாடகாவில் இரவு ஊரடங்கு உத்தரவின் போது சில செயல்பாடுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அவை:

  • அத்தியாவசிய நடவடிக்கைகள் தவிர, இரவு 7 மணி முதல் காலை 5 மணி வரை தனிநபர்களின் நடமாட்டம் கண்டிப்பாக தடை செய்யப்படும்.
  • நோயாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள், அவசரகால தேவைக்காக வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
  • அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் இரவில் இயங்கலாம்.
  • அத்தகைய நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அடையாள அட்டை முக்கியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

  • தொலைதொடர்பு மற்றும் இணைய சேவை பணியாளர்கள் மற்றும் அவர்களது வாகனங்கள் அந்தந்த நிறுவனத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும்.
  • ஐடி நிறுவனங்களில் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே அலுவலகத்தில் இருந்து பணியாற்றுவார்கள்.
  • மருந்தகங்கள் உள்ளிட்ட மருத்துவ, அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள் முழுமையாக செயல்படும்.
  • பிற வணிக நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளன.
  • வீட்டு விநியோகம் மற்றும் ஈ-காமர்ஸ் நிறுவனங்களின் செயல்பாடுகள் அனுமதிக்கப்படுகின்றன.
  • ரயில்கள் மற்றும் விமான பயணம் அனுமதிக்கப்படுகிறது.
  • விமான மற்றும் ரயில் நிலையம் செல்பவர்களுக்கு பொது போக்குவரத்து, தனியார் வாகனங்கள் மற்றும் டாக்ஸிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.
  • கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 11,042 புதிய பாதிப்புகளும், 194 இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!