தமிழகத்தில் முதலமைச்சர் மாநில ‘இளைஞர் விருது’ – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழகத்தில் முதலமைச்சர் மாநில 'இளைஞர் விருது' - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் முதலமைச்சர் மாநில 'இளைஞர் விருது' - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் முதலமைச்சர் மாநில ‘இளைஞர் விருது’ – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் சமுதாய வளர்ச்சிக்கு பணியாற்றும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டு தோறும் சுதந்திர தின விழாவின் போது முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வழங்கப்படும். தற்போது இந்த விருதிற்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

மாநில இளைஞர் விருது:

ஆண்டு தோறும் ஆகஸ்ட் 15, சுதந்திர தின விழாவின் போது 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது சமுதாய வளர்ச்சிக்கு இளைஞர்கள் ஆற்றும் பணிகள் அடிப்படையில் வழங்கப்படும். தற்போது இந்த ஆண்டிற்கான விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் சார்பில் தமிழக முதல்வரால் 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு மாநில இளைஞர் விருது வழங்கப்படும்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – மாநில அரசு அறிவிப்பு!

இந்த ஆண்டிற்கான இந்த விருது வருகிற 15.08.2021 அன்று வழங்கப்படவுள்ளது. சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு ரூ.50,000, பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் உள்ளடங்கிய முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வழங்கப்படும். தற்போது இந்த விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த விருத்திற்கான தகுதியையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தகுதி:

  • 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆன்/பெண் விண்ணப்பிக்கலாம். மேலும் அவர்களது வயது கடந்த ஏப்ரல் 1 2021 அன்று 15 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் மற்றும் மார்ச் 31 2021 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • கடந்த 2020-21 ஆம் நிதியாண்டில் (01.04.2020 முதல் 31.03.2021 வரை) மேற்கொண்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
  • விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழையும் இணைக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும். அவர்கள் செய்த தொண்டு சமூக/சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்திருக்க வேண்டும்.
  • அவர்கள் செய்த சேவையின் தாக்கம் தெளிவாக கண்டறியப்பட கூடியதாகவும், அளவிட கூடியதாகவும் இருக்க வேண்டும்.
  • மத்திய / மாநில அரசு பணியில் உள்ளவர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் / பள்ளி /கல்லூரிகள் பணியாற்றுபவர்கள் இந்த விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.
  • விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு மதிப்பு விருத்திற்கான பரிசீலனையில் கணக்கீடு கொள்ளப்படும்.
  • விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையம் இணைய தளமான http://www.sdat.tn.gov.in/ என்ற தளம் மூலம் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும்.
  • இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி நாள் 30.06.2021 மற்றும் நேரம் மாலை 5 மணி ஆகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!