12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – மாநில அரசு அறிவிப்பு!
உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்த ஆண்டு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் அதிவிரைவாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நோய் தொற்றால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. மாநிலங்கள் தோறும் ஊரடங்குகள் அமலில் உள்ளது. கடைகள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டது.
கோவா சுற்றுலா ஊக்குவிப்பு – TTAG தலைவர் கருத்து!!
இதன் தொடர்ச்சியாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. புதிய கல்வியாண்டு தொடங்கி விட்டது. ஆனாலும் மாணவர்களுக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவில்லை. அனைத்து மாநிலங்களிலும் மே மாதம் பொதுத்தேர்வை நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்க தொடங்கியது. அதனால் பொதுத்தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் பொதுத்தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்காது என்று முதலில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. இதனை தொடர்ந்து மாநில அரசுகள் ஆலோசனைகளை மேற்கொண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது. தமிழகம், புதுச்சேரி, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம்,போன்ற மாநிலங்களை தொடர்ந்து தற்போது உத்தரகண்டிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.