தமிழகத்தில் ஜூன் 28க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? தளர்வுகள் எதிர்பார்ப்பு!

2
தமிழகத்தில் ஜூன் 28க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? தளர்வுகள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் ஜூன் 28க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? தளர்வுகள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் ஜூன் 28க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? தளர்வுகள் எதிர்பார்ப்பு!

கொரோனா 2 ஆம் பரவல் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 28 ஆம் தேதிக்கு மேல் தற்போதுள்ள தளர்வுகளில் இருந்து சில கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதிக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஊரடங்கு தளர்வுகள்

தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஒன்றரை மாதங்களாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்ட முதல் 3 வாரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு, கொரோனா பரவல் வீதமானாது தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அதாவது தினசரி பாதிப்புகள் 35 ஆயிரத்தில் இருந்து தற்போது 6 ஆயிரமாக குறைந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. எனினும் ஜூன் 28 ஆம் தேதி வரை இந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரூ.2000 & மளிகை பொருட்கள் முறையாக வழங்கல் – அரசுக்கு கோரிக்கை!

இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து முழு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த 3 வாரங்களாக ஒவ்வொரு கட்டமாக செயல்படுத்தப்பட தளர்வுகளின் படி, அத்தியாவசிய கடைகளின் செயல்பாடுகளுக்கு கூடுதல் நேர கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகள், சலூன் கடைகள், தேநீர் கடைகள் உட்பட பல சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த 4 மாவட்டங்களில் மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இப்படி இருக்க தமிழக அரசு அறிவித்துள்ளபடி, ஜூன் 28 ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், அதற்கு பின்பாக மேலும் சில தளர்வுகள் கொடுக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். அதன் அடிப்படையில், கொரோனா பாதிப்பு விகிதம் குறைவாக உள்ள மற்ற 23 மாவட்டங்களிலும் பேருந்துகள் மீண்டுமாக இயக்கப்படலாம் எனவும் 50 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருக்கும் மதவழிபாட்டு தலங்கள் அனைத்தும் மீண்டுமாக திறக்கப்பட வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

இது தவிர திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு அரசு அனுமதி அளித்துள்ளதால், நகை மற்றும் ஜவுளி கடைகளை திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவசர காரணங்களுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள இ பதிவு நடைமுறைகளில் இருந்து சில கூடுதல் தளர்வுகளை அரசு அறிவிக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். எனினும் எவ்வகையான தளர்வுகளை அளிக்கலாம் என்பது குறித்து அரசு ஆலோசனை செய்து, பின்னர் அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!