தமிழகத்தில் ரூ.2000 & மளிகை பொருட்கள் முறையாக வழங்கல் – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணை ரூ.2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு முறையாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கொரோனா நிவாரணம்:
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்தில் மக்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில் அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் கொரோனா நிர்வாண நிதி ரூ.4000 (ரூ.2000+ரூ.2000 ) மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். கடந்த மே மாதம் கொரோனா நிவாரண நிதி முதல் தவணை வழங்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் தவணை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நாளை கடைசி நாள்!
இந்நிலையில் மக்களுக்கு நிவாரண நிதி ரூ.2000 மட்டும் முறையாக வழங்கப்படுகிறது என்றும் மளிகை பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. தற்போது இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, சில இடங்களில் நிவாரண நிதி ரூ.2000 வழங்கப்பட்டு மளிகை தொகுப்பில் குறைவாக பொருட்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில ரேஷன் கடைகளில் உரிய நேரத்தில் மளிகை பொருட்கள் வராததால் மளிகை தொகுப்புடன் கூடிய நிவாரண தொகையை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் சில கடைகளில் டோக்கன்களை வாங்கிக்கொண்டு நிவாரண நிதி மட்டும் வழங்கப்படுகிறது. இதனால் இவர்களுக்கு மளிகை தொகுப்பு கேள்விக்குறியாகிறது. இந்நிலையில் மளிகை தொகுப்பு பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடம் கேட்கும் போது வாக்குவாதம் ஏற்படுகிறது.
TN Job “FB Group” Join Now
குறிப்பாக கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் அரசின் மளிகை பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் தவித்து வருவதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. எனவே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இதில் கவனம் செலுத்தி, அனைவருக்கும் மளிகை தொகுப்புடன் கூடிய நிவாரண தொகை கிடைக்கவும், நிவாரண தொகை மட்டும் பெற்று கொண்டவர்களுக்கு மளிகை தொகுப்பு வழங்குவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.