ஜூலை 9 வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
திரிபுரா மாநிலத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் ஜூலை 9 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக மாநிலங்கள் தோறும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதன் விளைவாக கடந்த சில வாரமாக நாட்டில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்தது. தற்போது நாட்டில் கேரளா, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, சத்தீஸ்கர், மணிப்பூர் மற்றும் ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கல் – முதல்வர் உத்தரவு!
இதன் காரணமாக இந்த 6 மாநிலங்களில் மத்திய குழு ஆய்வு செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி சம்பந்தப்பட்ட 6 மாநிலங்களுக்கு மத்திய குழுவினர் நேற்று (ஜூலை 2) அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் காரணமாக திரிபுரா மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் ஜூலை 9 ஆம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
- கர்தலா, ராணிர்பஜார், உதய்பூர், கைலாஷாஹர், தாராநகர், கோவாஇ, பெலோனியா ஆகிய 9 நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது
- ஜூலை 9ம் தேதி வரை தினசரி மதியம் 2 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
- கிராமப்புறங்களில் மாலை 6 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு நிலவும்.
TN Job “FB Group” Join Now
- வாகனங்கள் காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்க அனுமதி.
- மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் மாலை 4 மணி வரை இயங்க அனுமதி.
- ஹோட்டல்கள் மதியம் 2 மணி வரை இயங்க அனுமதி.
- மதம், சமூகம், அரசியல் கூட்டங்களுக்கும் ஷாப்பிங் மால்களும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.