தமிழகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கல் – முதல்வர் உத்தரவு!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் சுய உதவிக் குழுக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் தொழில் முனைவோருக்கு கடன் வழங்க வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கடன் உதவி:
தமிழக்ததில் கூட்டுறவு வங்கிகள் மூலம் மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு கடன் அமைப்பு தான் மாநிலத்தில் தனிப்பெரிய நிறுவன கடன் வழங்கும் முறையாக விளங்குகிறது. வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பயிர்க்கடன் பெற்று விவசாயத்தை மேம்படுத்த வழி வகை அமைகிறது. வேளாண் கூட்டுறவு வங்கிகள் சிறு மற்றும் நடுத்தர தவணை கடன்களை விவசாயம் மற்றும் அதன் சார்ந்த தொழில்களுக்கு வழங்குகிறது.
மதுரை காமராஜர் பல்கலை 2019 நவம்பர் மாத தேர்வு முடிவுகள் – உயர் நீதிமன்றம் உத்தரவு!
மேலும் சுய உதவி குழுக்களுக்கும், சிறு, குறு வணிக நிறுவனங்களுக்கும் கூட்டுறவு வங்கிகள் சார்பில் கடன் உதவி அளிக்கப்படுகிறது. மேலும் சுய தொழில் செய்து வருமானம் ஈட்ட முயற்சிக்கும் நபர்கள் கூட்டுறவு வங்கிகளில் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்று தொழிலை தொடங்குகின்றனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கும் கடன் வழங்கப்படுகிறது. அதனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசமும் வழங்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் பேசிய முதல்வர், மகளிர் தொழில் முனைவோருக்கு கூட்டுறவு வங்கிகள் கடன் உதவி அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பெண்கள் தொழில் தொடங்க அரசு சார்பில் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் குறைந்த வட்டி கணக்கிடப்பட்டு கடன்கள் வழங்க வேண்டும் என கூறினார். மேலும் எடை குறைவு போன்ற குறைகளை நீக்கி, தங்கு தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.