மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!
ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகாரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஊரடங்கு:
கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உள்ள உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற கொடிய வகை வைரஸ் மக்களுக்கு பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கட்டுக்கடங்காமல் பரவி வரும் இந்த வைரஸ் தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். குறிப்பாக வயதானவர்கள் சர்க்கரை, நீரிழிவு, இதய கோளாறு உள்ளிட்ட இணை நோய்கள் உள்ளவர்கள் உயிரிழந்தனர். வைரஸ் பரவலை தடுக்க சீன அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டது. அந்த வகையில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
உக்ரைன், ரஷ்யா போர் தீவிரம் – செர்னியவ் நகரில் ஏவுகணை தாக்குதல்! 33 பேர் பலி!
இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று சீனாவை தொடர்ந்து இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவ தொடங்கியது. இதனால் அனைத்து நாடுகளும் உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலுக்கு இணங்க ஊரடங்கை அறிவித்தது. இந்த வைரஸ் அடுத்தடுத்து உருமாறி அதிக வீரியத்துடன் பரவியது. இந்த நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் ஓமிக்ரான் வைரஸ் என்று கூறப்படுகிறது.
பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகிறது. அதனால் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹாங்காங் நிர்வாகம் ஊரடங்கை அமல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அரசு இன்னும் தீவிரமாக ஆலோசித்து வருவதாக ஹாங்காங் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனால் பொதுமக்கள் விரைவில் அத்தியாவசிய பொருட்களையே வாங்கி கொள்ள கடைகளில் நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றன.