ஜூன் 12 முதல் முழு ஊரடங்கு அமல் – கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு!
கொரோனா பரவல் காரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது உள்ள ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சில தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களும் பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப ஊரடங்குகளை பிறப்பித்துள்ளன. கொரோனா தொற்று எதிர்பாராத அளவு தினந்தோறும் புதிய உச்சத்தை அடைந்த நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்தது. சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ நிபுணர்கள் ஊரடங்கை அமல்படுத்தி மக்கள் நடமாட்டத்தை குறைக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகள் ஜூன் 14 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சில தளர்வுகளும் அளித்துள்ளது. இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஜூன் 14 ஆம் தேதி அதிகாலை வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.
தமிழக விவசாயிகளுக்கு புதிய பயிர்க்கடன் வழங்கல் – கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு!!
காய்கறி, மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அரசு அனுமதியளித்துள்ளது. ஜூன் 10 வரை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 12 முதல் 14 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர், பூங்கா, பொழுதுபோக்கு தளங்களுக்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது.