தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு!

0
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு!

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. ஆனால் சீனா மற்றும் அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரிக்கும் சமயத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக கடந்த 1ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளன. மேலும் தற்போது அனைத்து துறைகளும் வழக்கம் போல இயல்பு நிலைக்கு திரும்பி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் இந்தியாவில் கொரோனாவின் 4ம் அலை பரவ வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து அண்டை நாடான சீனாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

மாநில அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி (DA) உயர்வு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த சீனாவில் தொற்று அதிகம் பரவியுள்ள 10 நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்படலாம் என்று தெரிகிறது. மேலும் அண்மையில் கொரோனா பரவல் நிலவரம் குறித்து ஆய்வு கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கினால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் கூட்டத்தின் முடிவில் முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் இவர் கூறியதாவது, தமிழகத்தில் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல் நடவடிக்கைகளை பொதுமக்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தபடலாம் என்றும் கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!