2023-24 பட்ஜெட்டில் அட்டகாசமான அறிவிப்புகள் – பழைய ஓய்வூதிய திட்டம் அமல்! முழு விவரம் உள்ளே!

0
2023-24 பட்ஜெட்டில் அட்டகாசமான அறிவிப்புகள் - பழைய ஓய்வூதிய திட்டம் அமல்! முழு விவரம் உள்ளே!
2023-24 பட்ஜெட்டில் அட்டகாசமான அறிவிப்புகள் - பழைய ஓய்வூதிய திட்டம் அமல்! முழு விவரம் உள்ளே!
2023-24 பட்ஜெட்டில் அட்டகாசமான அறிவிப்புகள் – பழைய ஓய்வூதிய திட்டம் அமல்! முழு விவரம் உள்ளே!

2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வெளியானதை தொடர்ந்து, மாநில அரசுகளும் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தயாரித்து தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்த மாநிலத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது.

பட்ஜெட்

நாடாளுமன்றத்தில் 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, தற்போது மாநில அரசுகள் ஒவ்வொன்றாக நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தயாரித்து தாக்கல் செய்ய தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், இமாச்சலப் பிரதேசம் மாநில சட்டமன்றத்தில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் சுக்விந்தர் சிங் அவர்கள் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில், மதுபான பாட்டில்களுக்கு விதிக்கப்படும் பசு செஸ் வரி உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ஒவ்வொரு மது பாட்டில்களுக்கும் ரூ.2 என பசு செஸ் வரி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ரூ.10 ஆக உயர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி வருவாய் ஈட்டவும் இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழக தொழிலாளர்களுக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி – அரசாணை வெளியீடு!

மேலும் இந்த வரிப்பணத்தை பயன்படுத்தி பசுக்களுக்கு சரணாலயம் அமைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் இருக்கும் 1.36 லட்சம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!