தமிழக தொழிலாளர்களுக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் தொழிலாளர் நல வாரியத்திற்கு நிதி செலுத்தும் கட்டிட தொழிலாளர் விபத்தில் மரணமடைந்தால் விபத்து மரண உதவித் தொகையை ரூ. 2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணை வெளியீடு
தமிழகத்தில் பல மாவட்டங்களில் தற்போது கட்டிட வேலை அதிகமாக நடைபெற்று வருகிறது. இதில் வேலை செய்பவர்களுக்கு வேலையின் போது அடிபட்டால் அல்லது விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டால் அரசு சார்பில் ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இந்நிலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என பிரச்சனை எழுந்துள்ள நிலையில் தொழிலாளர் நல வாரியத்திற்கு நிதி செலுத்தும் கட்டிட தொழிலாளர்களுக்கு புதிய அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.
அதன் படி தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும், தொழிலாளர் விபத்தில் மரணமடைந்தால், வழங்கப்படும் விபத்து மரண உதவித் தொகையினை ரூ.1,00,000/-லிருந்து ரூ.2,00,000/- ஆக உயர்த்தி வழங்கவும். இதனால் ஏற்படும் செலவினத்தை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய நிதியிலிருந்து மேற்கொள்ளவும், மேலும், இந்த உயர்த்தப்பட்ட உதவித் தொகையினை 01.04.2023 முதல் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என அரசாணையை அரசு கூடுதல் தலைமைச் செயலாளார் முகமது நசிமுத்தின் வெளியிட்டுள்ளார்.