தமிழகத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி தொடக்கம்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலைகள் தமிழக அரசின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வேட்டி, சேலை உற்பத்தி செய்ய அரசாணை இன்னும் வழங்கப்படாததை குறித்து பாமக தலைவர் அன்புமணி அரசாணையை விரைவில் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலவச வேட்டி,சேலை:
இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் தொற்று படிப்படியாக குறைய தொடங்கியது. மேலும் தடுப்பூசி கண்டிபிடிக்கப்பட்டதால் மக்கள் தடையின்றி வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். தமிழக அரசு கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கியது.
Exams Daily Mobile App Download
கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் நிவாரண தொகைகள் அரசின் மூலம் வழங்கப்பட்டது. இதை தவிர இலவசமாக உணவு பொருட்களையும் வழங்கியது. இது கொரோனா காலத்தில் மக்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. மேலும் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு தேவையான வீட்டு மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. தற்போதைய தமிழக அரசு மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
தமிழகத்தில் மக்கள் நல பணியாளர்கள் பணி நியமன விவகாரம் – அரசு புதிய அறிவிப்பு!
தற்போது ஆளும் அரசு தேர்தல் வாக்குறுதியாக பல நல்ல திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்துவதாக அறிவித்திருந்தது. மேலும் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இது குறித்து இன்னும் அரசு ஆணை வழங்கப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி குறித்து அரசாணையை உடனே வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.