தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேஷ்டி, சேலைகள் – அமைச்சர் விளக்கம்!
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்காக ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தாண்டு இலவச வேஷ்டி, சேலை வழங்குவது குறித்து அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
இலவச வேஷ்டி, சேலைகள்:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இலவச வேட்டி, சேலை வழங்குவது குறித்து கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். எப்போதுமே தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடை உற்பத்தியும் கைத்தறி நெசவாளர்கள் மூலமாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. அதே போல ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை உற்பத்தியும் கைத்தறி நெசவாளர்கள் மூலமாகத்தான் கிடைக்கிறது.
இலவச சீருடை வழங்கும் திட்டத்திற்கான உற்பத்தி நிறைவடைந்ததும் வேட்டி, சேலை வழங்குவதற்கான உற்பத்தி தொடங்கிவிடும். இதனால், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், கைத்தறி மற்றும் பெடல் தறி நெசவாளர்களுக்கு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரைக்கும் தொடர்ந்து வேலை இருக்கும். இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்படவுள்ள வேட்டி, சேலைகளுக்கான உற்பத்தி கூடிய விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கோவில் சொத்துக்கள் குறித்து முக்கிய உத்தரவு – நீதிமன்றம் அதிரடி!
Exams Daily Mobile App Download
மேலும், தமிழகத்தில் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவும், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தொடர்ந்து அதற்கான உற்பத்தியை மேற்கொள்ளவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேட்டி, சேலை வழங்குவதற்கான திட்டத்திற்கு இந்த நிதியாண்டில் மட்டுமே 487.92 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கைத்தறித் துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.