தமிழகத்தில் கோவில் சொத்துக்கள் குறித்து முக்கிய உத்தரவு – நீதிமன்றம் அதிரடி!
தமிழக அரசின் இந்து சமய அறநிலைய துறையின் கீழ் இயங்கி வரும் கோவில்களில் உள்ள சொத்துக்களை அறநிலைய துறை கோவில்களாகவோ உரிமை கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றம் உத்தரவு:
தமிழகத்தில் உள்ள கோவில்களின் நிர்வாகத்தை முறையாகப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், மேற்பார்வையிடவும் 1925 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலைய துறை தொடங்கப்பட்டது. இந்த துறை மூலமாக கோவில்கள், அற நிறுவனங்கள், மற்றும் திருமடங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை சொத்துக்களாக கருதுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான பொதுநல வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகத்தில் உள்ள ஆலயங்களின் சொத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை சொத்துக்களாகவோ; கோவில்களை அறநிலையத்துறை கோவில்களாகவோ உரிமை கோர அரசுக்கு தடை விதிக்க கோரிய பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் தொடங்கிய வழக்கில் கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை, சம்பந்தப்பட்ட கோவில்களின் நலனுக்கு மட்டுமே இந்து சமய அறநிலையத்துறை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்
Exams Daily Mobile App Download
இந்த வழக்கை சென்னை தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு விசாரணை செய்து அறநிலையத்துறை சட்டப்படி, கோவில் சொத்துக்களை கோவில் நலனுக்காக, அறநிலையத்துறை ஆணையரின் ஒப்புதல் இல்லாமல் குத்தகைக்கு விட அனுமதி இல்லை என தெரிவித்தது. மேலும் கோவில் சொத்துக்களை குத்தகைக்கு வழங்க அறநிலையத்துறை ஆணையருக்கு அதிகாரம் இருந்தாலும், அது சம்பந்தமாக அறங்காவலர்களின் ஆட்சேபனைகளை கேட்க வேண்டும் எனவும், கோவில் சொத்துக்களை அறநிலையத்துறை சொத்துக்களாக கருதக் கூடாது என உத்தரவிடப்பட்டது.