திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு – இலவச டிக்கெட் வெளியீடு!
பிப்ரவரி மாதம் திருப்பதி பெருமாள் கோயிலுக்கு தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு பிப்ரவரி 15 ஆம் தேதி தரிசனத்துக்கான இலவச டிக்கெட் வழங்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் ஜவஹர் தெரிவித்துள்ளார். மேலும் இலவச தரிசன டிக்கெட் பிப்ரவரி 15 ஆம் தேதி காலை 9 மணி அளவில் இருந்து கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச தரிசன டிக்கெட்:
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசனம் செய்ய தமிழகம் கர்நாடகா ஆந்திரா கேரளா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் மேற்கொள்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானத்தின் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஐபிஎல் தங்கள் வாழ்க்கையை மாற்றியது எப்படி? விராட் கோஹ்லி, ABD வில்லியர்ஸ் பேட்டி!
இதன்படி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அலிபிரி சோதனைச் சாவடியை கடக்கும் முன் 48 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனையான RT-PCR நெகட்டிவ் சான்றிதழை அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் திருப்பதி செல்லும் பக்தர்களுக்காக இலவச தரிசன டிக்கெட் எப்போது வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் வருகிற பிப்ரவரி 15 ஆம் தேதி டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த இலவச தரிசனத்துக்கான டிக்கெட்டை பிப்ரவரி 15 ஆம் காலை 9 மணிக்கு வழங்குவதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு பேருந்துகளில் பயணிப்போருக்கு ஹாப்பி நியூஸ் – உணவகங்களின் விபரம் வெளியீடு!
மேலும் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடந்து வந்த சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, கல்யாண உற்சவம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் மார்ச் 1 ஆம் தேதி முதல் பக்தர்களுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை முதல் இரவு வரை 28,410 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் என்றும் 14,831 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவிலில் தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ரூ2.08 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளதாக தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் ஜவஹர் கூறினார்.