அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்? மாநில திட்ட இயக்குநர் உத்தரவு!
இந்தியாவில் ஸ்மார்ட்போன் இல்லாத அரசுப் பள்ளி மாணவர்களின் பட்டியலை கணக்கெடுத்து அனுப்ப முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு சம்க்ரா சிக்ஷாவின் மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இலவச ஸ்மார்ட்போன்:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக கடந்த ஒரு வருட காலமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மாணவர்களுக்கு பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. முதலில் தனியார் பள்ளிகள் இணையதள வகுப்புகளை நடைமுறைப்படுத்தியது. அதனை தொடர்ந்து அரசு பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனால் ஸ்மார்ட் போன் இல்லாத காரணத்தால் அரசு பள்ளி மாணவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கு பெற முடியவில்லை.
ஜன்தன் வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அம்சங்கள் – தவறாமல் படிங்க!
ஏழை, எளிய மக்கள் இந்த ஊரடங்கு காலத்தில் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தினசரி உணவுக்காக சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்குவது என்பது இயலாத ஒரு காரியமாக உள்ளது. ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களின் கல்வி நிலை இந்த ஊரடங்கு காலத்தில் கேள்விக் குறியாக உள்ளது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் மாணவர்களின் நிலையை கருதி தேர்வில்லாமல் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி என்பது எட்டாக் கனியாகவே உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையை சரி செய்ய அரசுகள் பல்வேறு மாற்று நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் ஸ்மார்ட் போன் இல்லாத அரசுப் பள்ளி மாணவர்களின் பட்டியலை அனுப்ப முதன்மைக் கல்வி அலுவலகர்களுக்கு சம்க்ரா சிக்ஷாவின் மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இந்த பட்டியல் கிடைத்த உடன், மத்திய மாநில அரசுகளின் நிதியுதவியுடன் மூலம், ஸ்மார்ட் போன் இல்லாத அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.