ஜன்தன் வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அம்சங்கள் – தவறாமல் படிங்க!
அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற நோக்கில் மத்திய அரசு ஜன்தன் வங்கி கணக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த திட்டத்தில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.
ஜன்தன் வங்கி கணக்கு:
நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற நோக்கில் பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் மோடி அவர்களின் முதல் பதவி காலத்தில் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது, இந்த திட்டம் மூலம் பல வகையான சிறப்பு சலுகைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த கணக்கை 10 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – UPI இயக்கம் & முடக்கம்!
ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டம், உயிர் காப்பீட்டு திட்டம் போன்ற பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஜன்தன் வங்கி கணக்கினை அனைத்து தரப்பு மக்களும் தொடங்கி வருகின்றனர். இந்நிலையில் ஜன்தன் வங்கி கணக்கை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.
ஜன்தன் வங்கி கணக்கு அம்சங்கள்:
ஜன்தன் வங்கி கணக்கு திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் பூஜ்ஜிய இருப்பு கணக்கை திறக்கலாம். இதை உங்கள் வீட்டின் அருகே உள்ள அனைத்து வங்கி கிளைகளிலும் திறக்க இயலும்.
ஜன்தன் திட்டம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் ரூ.1.30 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. அதாவது கணக்கு வைத்திருப்போருக்கு விபத்து ஏற்பட்டால் விபத்து காப்பீட்டுக்கான ரூ.1 லட்சம் மற்றும் பொது காப்பீடான ரூ.30,000 வழங்கப்படும். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
TN Job “FB Group” Join Now
ஜன்தன் வங்கி கணக்கை தொடங்க உங்கள் அருகிலுள்ள வங்கிக்குச் சென்று பெயர், மொபைல் எண், வங்கி கிளையின் பெயர், விண்ணப்பதாரரின் முகவரி, தொழில் அல்லது வேலைவாய்ப்பு மற்றும் ஆண்டு வருமானம் போன்ற விரிவான தகவல்களுடன் படிவத்தை நிரப்பி வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.