தமிழக அரசு வழங்கும் இலவச மின் மோட்டார் தையல் இயந்திரம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக அரசு வழங்கும் இலவச மின் மோட்டார் தையல் இயந்திரம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு வழங்கும் இலவச மின் மோட்டார் தையல் இயந்திரம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு வழங்கும் இலவச மின் மோட்டார் தையல் இயந்திரம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிற்படுத்தப்பட்ட இன மக்கள் மற்றும்‌ சிறுபான்மையினர்‌களுக்கு உதவிபுரியும் வகையில் இலவச தையல் இயந்திரத்தை வழங்கி வருகிறது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை பார்க்கலாம்.

இலவச தையல் இயந்திரம்:

தமிழகத்தில் கொரோனா காரணமாக பொதுமக்கள் பொருளாதார நெருக்கடி நிலையை சந்தித்து வருகின்றனர். அதனால் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதையடுத்து சிறுபான்மையின மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. அதன்படி பிற்படுத்தப்பட்ட இன மக்கள் மற்றும்‌ சிறுபான்மையினர்‌களுக்கு பயன் அளிக்கும் விதமாக மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரத்தை வழங்க உள்ளதாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Post Office இல் தினமும் ரூ.417 சேமிப்பதன் மூலம் ரூ.40 லட்சம் பெறலாம் – சிறந்த லாபம் தரும் PPF திட்டம்!

இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 20 முதல் 45 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் தையல்கலை பயின்றவராகவும் இருக்க வேண்டும். அத்துடன் தையல் கலை பயின்றதற்கான சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமானம் ஒரு லட்ச ரூபாய்க்குள் இருத்தல் வேண்டும். அத்துடன் ஏற்கனவே தையல்‌ இயந்திரம்‌ பெற்றிருப்பவர்கள் 7 ஆண்டுகளுக்கு மேல் ஆன பிறகே மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். இதனை தொடர்ந்து கைம்பெண்‌ மற்றும்‌ கணவனால்‌ கைவிடப்பட்‌ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா – அச்சத்தில் பெற்றோர்கள்!

இந்த இலவச மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலகத்திற்கு நேரில் சென்று தேவையான ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் சிறுபான்மை இன மக்கள் இதனை பெற்று பொருளாதார நிலையில் தங்களை மேம்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீ வெங்கட பிரியா அவர்கள் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!