‘தீபாவளி வரை விலையில்லா ரேஷன், ஜூன் 21 முதல் இலவச தடுப்பூசி’ – நாளை அமைச்சரவை கூட்டம்!
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் வீரியம் சற்று குறைந்து வரும் நிலையில் நாளை (ஜூன் 9) நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
மத்திய அமைச்சரவை கூட்டம்:
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக நாட்டில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தொற்றில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் கொரோனா தொற்றின் சங்கிலியை உடைக்கும் வகையில் தடுப்பூசி வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மத்திய அரசு உத்தரவு!!
மேலும் தகுதியுடையவர்கள் அனைவரும் தடுப்பூசியை தவறாமல் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (ஜூன் 7) நாட்டு மக்களுடன் காணொளி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். கொரோனா தொற்று குறைந்து வரும் காலத்தில் இவரது உரை மிக முக்கியமானதாக கருதப்பட்டது. அதில், தீபாவளி வரை மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். இந்த அறிவிப்பினால் ஊரடங்கு நவம்பர் மாத காலம் வரை நீட்டிக்கப்படுமா? என்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் ஜுன் 21 முதல் மாநில அரசுகளுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் நாளை (ஜூன் 9) காலை 11 மணி அளவில் மத்திய அமைச்சரவை கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஜூன் 21ம் தேதி முதல் இலவச தடுப்பூசி வழங்கல், தீபாவளி வரை இலவச உணவு தானியம் வழங்கல் போன்றவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.