வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மத்திய அரசு உத்தரவு!!
மத்திய அரசு வெளிநாட்டிற்கு பணிக்கு செல்லும் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் ஒலிம்பிக் வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி விதியை மாற்றி அமைத்துள்ளது. மேலும், அவர்களின் பாஸ்போர்டுடன் கோவின் சான்றிதழை இணைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
கொரோனா தொற்றினை எதிர்க்க உள்ள ஒரே பேராயுதம் தடுப்பூசி ஒன்று தான் என்று நேற்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றிய போது கூறியுள்ளார். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவர்க்கும் மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்குவதாகவும், மாநில அரசுகள் இதற்காக பங்களித்த 25% தொகையையும் இனி மத்திய அரசே ஏற்கும் என்றும் கூறியுள்ளார். தற்போது சாதாரணமாக முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கு இடையில் 12 முதல் 16 வாரங்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கொரோனா தடுப்பூசி – ரூ.39.05 கோடி மதிப்பில் அரசு கொள்முதல்!!
தற்போது, வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்லும் நபர்கள், மாணவர்கள் மற்றும் ஒலிம்பிக்ல் கலந்து கொள்ளும் வீரர்கள் 4 வார இடைவெளியில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆகஸ்ட் மாதம் வரை பயணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டோக்கியோ நகரில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் தொடரில் கலந்து கொள்ளும் வீரர்களுக்காகவும் இந்த விதி கொண்டு வரப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மாவட்ட சிறப்பு அதிகாரியிடம் தங்களின் முறையான ஆவணத்தை கொடுத்து, பயணத்திற்கான காரணத்தை உறுதி செய்து இந்த சலுகையை பெறலாம். ஒலிம்பிக் செல்லும் வீரர்கள் தங்களது ஆவணத்தில் கோவிஷீல்டு பெற்று இருந்தால், அதனை குறிப்பிட்டால் மட்டுமே போதும். வெளிநாடு செல்வதற்கு வசதியாக இவர்களின் பாஸ்போர்ட்டுடன் கோவின் சான்றிதழை இணைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.