இலவச கேஸ் சிலிண்டர், பேருந்து பயணம் & இருசக்கர வாகனம் – பாஜகவின் சூப்பர் தேர்தல் அறிக்கை!
உத்திர பிரதேசத்தில் 14ம் தேதி நடைபெற உள்ள சட்மன்ற தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தில் வாக்கு சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆளும் பாஜக கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை:
உத்திர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. இதனையடுத்து பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் கட்ட தேர்தலும், மார்ச் 3ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் உத்தரகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் மட்டும் ஒரே கட்டமாக பிப்ரவரி 14ம் தேதி தேர்தலும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து வாக்குகள் மார்ச் 10ம் தேதி எண்ணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் உத்திரபிரதேசத்தில் பிப்ரவரி 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து ஆளும் கட்சியான பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அந்த தேர்தல் அறிக்கையில் அனைத்து விவசாயிகளுக்கும் பாசனத்திற்காக இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்.14ம் தேதி அரசு, தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை – முக்கிய அறிவிப்பு!
மேலும் விதவைகளுக்கான மாத ஓய்வூதியம் 800 ரூபாயிலிருந்து 1500 ஆக உயர்த்தப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் 1500 ஆக உயர்த்தப்படும். ஹோலி மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு இலவசமாக 2 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் கொண்டு வரப்படும். மேலும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச இருசக்கர வாகனம் வழங்கப்படும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.