தமிழக கல்லூரி மாணவர்களுக்கான இலவச டேட்டா திட்டம் – அரசுக்கு கோரிக்கை!!
தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்காக தினசரி 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. எனவே மீண்டும் இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இலவச டேட்டா:
தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த 2020-21 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக பல தரப்பு மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இதனால் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் சேர்வதற்கு சிரமம் ஏற்பட்டு வந்தது. காரணம் ஏழ்மை காரணமாக அவர்கள் இணைய வசதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
பேஸ்புக் (Facebook) பயனர்கள் கவனத்திற்கு – லைவ் ஆடியோ சாட் வசதி அறிமுகம்!
இதன் காரணமாக கடந்த ஆட்சி காலத்தில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து கல்லூரிகளில் படிக்கும் 9,69,047 மாணவ, மாணவியருக்கு தினசரி 2 ஜிபி இலவச டேட்டா வழங்கப்பட்டது. இந்த திட்டம் கல்லூரி மாணவர்களுக்கு தக்க உதவிகரமாக இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது இந்த திட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் மாணவ, மாணவியர் ஆன்லைன் வழிக்கல்வி மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. தற்போது இது குறித்து பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேலு அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதன்படி அவர் கூறியதாவது, கல்லூரி மாணவர்களுக்கான 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் முடிவுற்றது குறித்து அனைத்து கல்லூரி, பல்கலை மாணவ மாணவியர்களுக்கு உயர் கல்வித்துறையின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். புதிய மாநில அரசு மாணவ, மாணவியரின் நலன் கருதி இந்த திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வாய்ப்புள்ளது. எனவே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று நம்பிக்கை இருப்பதாக துணை வேந்தர் அவர்கள் தெரிவித்தார்.