நாடு முழுவதும் மாநிலங்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி – இன்று முதல் தொடக்கம்!
நாடு முழுவதும் இன்று முதல் மாநிலங்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் மத்திய அரசின் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.
கொரோனா தடுப்பூசி:
நாடு முழுவதும் கொரோனா பரவல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டன. மேலும் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஜூலை 15 வரை பஸ்பாஸ் செல்லும் – போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்!
இருந்த போதிலும் செப்டம்பர் மாதம் கொரோனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதால் தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பலர் தடுப்பூசியின் அவசியம் அறிந்து ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்ள வருகின்றனர். கடந்த மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி சார்பில் வழங்கப்பட்டு கொரோனா தடுப்பூசி திட்ட வழிகாட்டு நெறிகள் திருத்தப்பட்டன.
அதனை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் 50 சதவீதத்தை மத்திய அரசுக்கும், 25 சதவீதத்தை மாநில அரசுகளுக்கும், 25 சதவீதத்தை தனியார் மருத்துவமனைகளுக்கும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வது, மேலும் தடுப்பூசிகளை கொண்டு செல்வதில் பல சிரமம் ஏற்படுவதாக மாநில அரசுகள், மத்திய அரசிடம் புகார் தெரிவித்தனர்.
TN Job “FB Group” Join Now
அதன்படி கடந்த ஜூன் 7 ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என தெரிவித்தார். இந்நிலையில் மாநிலங்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் மத்திய அரசின் புதிய நடைமுறை இன்று (ஜூன் 21) முதல் அமலுக்கு வருகிறது.