தமிழகத்தில் ஜூலை 15 வரை பஸ்பாஸ் செல்லும் – போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் இன்று முதல் 4 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து மீண்டும் துவக்கப்பட்டுள்ள நிலையில், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு என்று மூன்று வண்ணங்களில் இலவச பேருந்து டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பேருந்து போக்குவரத்து:
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு மாநிலம் முழுவதும் விதிக்கப்பபட்டது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டது. பேருந்து, ஆட்டோ, மற்றும் டாக்ஸி போன்ற பொதுப்போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அவசர தேவைகளுக்காக மட்டும் மக்கள் இ – பதிவு செய்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று முதல் துவக்கம் – 50% பயணிகள் மட்டுமே!
இதனால் கடந்த மாதம் முதல் பேருந்துகள் இயங்கவில்லை. தற்போது தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு பின்னர் கொரோனா பாதிப்புகள் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் குறைந்து உள்ளது. ஜூன் 20ம் தேதி வரை பேருந்துகள் இயங்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பாதிப்புகள் குறைவாக உள்ள 4 மாவட்டங்களில் 50% பயணிகளுடன் ஜூன் 21ம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து செயல்பட அரசு அனுமதித்துள்ளது. மேலும், தமிழகத்தில் அரசு நகர பேருந்துகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் இலவசமாக பயணிக்கலாம் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள், ஏற்கனவே வாங்கிய ரூ.1,000 பஸ் பாஸ் ஜூலை 15 ஆம் தேதி வரை செல்லும் என்று தெரிவித்துள்ளார். பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு என்று மூன்று வண்ணங்களில் இலவச பேருந்து டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. இன்று முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இடையில் 50% பயணிகளுடன் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் இந்த விளக்கங்களை அளித்துள்ளார்.
Yes nice