சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று முதல் துவக்கம் – 50% பயணிகள் மட்டுமே!
தமிழகத்தில் இன்று முதல் பல வித புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மீண்டும் மெட்ரோ ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன.
கொரோனா கால ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்பு, நோய் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்து வந்ததால் ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஒவ்வொரு வாரமும் நீட்டிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் தற்போது வரை ஊரடங்கு பல வித தளர்வுகளுடன் பின்பற்றப்பட்டு வருகின்றது. நேற்று ஊரடங்கு முடிவடைந்த நிலையில் மருத்துவ குழுவின் ஆலோசனையின் பேரில் மேலும் 1 வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார்.
ஜூன் 29 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – இன்று முதல் அமல்!
தற்போது பின்பற்றபட்டு வரும் தளர்வுகளுடன் மேலும் சில தளர்வுகள் தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பேருந்து சேவைகள் இன்று முதல் மீண்டும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் 50 சதவீத பயணிகளுடன் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. பயணிகளின் தேவைகளுக்கு எதுவாக காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சேவைகள் இயங்கும்.
TN Job “FB Group” Join Now
அதிலும், மக்கள் அதிகமாக பயணிக்கும் நேரங்களான காலை 9 மணி முதல் 11 மணி மற்றும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை 5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்று இயக்கப்பட இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதர நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் பயணிக்கும் போது மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மக்களின் தேவைகளை பொறுத்து ரயில்கள் இயக்கப்படும் நேரம் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.