ஜூன் 29 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – இன்று முதல் அமல்!
உத்தரகண்ட் மாநிலத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் படி ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பார்கள் 50 சதவீத இருக்கைகளுடன் மீண்டுமாக திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு நீட்டிப்பு
உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளாக ஜூன் 22 வரை அமல்படுத்தப்பட்டிருந்த முழு ஊரடங்கு உத்தரவானது சில தளர்வுகளுடன் ஜூன் 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முன்பு அறிவிக்கப்பட்டிருந்த வழிகாட்டுதல்கள் மேலும் ஒரு வாரத்திற்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில தளர்வுகளும் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூலை 2வது வாரம் பள்ளிகள் திறப்பு? அரசு திட்டம்!
அந்த வகையில் மாநிலம் முழுவதும் அளிக்கப்பட்டுள்ள புதிய தளர்வுகளின் படி, சாமோலி, ருத்ரபிரயாக், உத்தர்காஷி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் ஜூலை 1 முதல் பத்ரிநாத், கேதார்நாத் மற்றும் கங்கோத்ரி-யமுனோத்ரி ஆகிய இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
- ஜூலை 11 முதல், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உள்ள பொது மக்கள் ‘சார் தாம்’ பகுதிகளை பார்வையிடலாம்.
- மேலும் ஹோட்டல்கள், உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 50 சதவீத இருக்கை வசதிகளுடன் அனுமதிக்கப்படும்.
- பார்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- ஆட்டோக்கள் நகரங்களில் மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
- மளிகை பொருட்கள் மற்றும் பிற கடைகள் அனைத்தும் வாரத்தில் ஐந்து நாட்களும் திறக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
- ஆனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் அனைத்தும் மூடப்படிருக்க வேண்டும்.
- அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அலுவலகங்கள் முழு திறனுடன் செயல்படும்.
- இருப்பினும், அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத வருகையுடன் மட்டுமே திறக்க முடியும்.
- வருவாய் நீதிமன்றங்கள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.