20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் – முதல்வர் அதிரடி!
ஏழை மக்களுக்கு சமையல் எரிவாயு வழங்க மத்திய அரசு சார்பில் ‘உஜ்வாலா திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படும் என மாநில முதல்வர் கூறியுள்ளார்.
இலவச சமையல் எரிவாயு:
மத்திய அரசினால் உஜ்வாலா திட்டம் 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த 5 கோடி பெண் உறுப்பினர்களுக்கு சமையல் எரிவாயு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டது. அதனால் பல்வேறு ஏழை, எளிய மக்கள் பயன்படுவதால் மேலும் சில பிரிவுகளும் இதில் இணைக்கப்பட்டன.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு? அகவிலைப்படி 31 ஆக உயர்வு!
கிராமப்புற மக்கள் பலர் பாரம்பரிய சமையல் எரிபொருளான விறகு, நிலக்கரி மற்றும் மாட்டு சாணம் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். எனவே கிராமப்புற மக்கள் மற்றும் பின்தங்கியவர்கள் எல்பிஜி போன்ற சுத்தமான சமையல் எரிபொருளை பயன்படுத்த வேண்டும் என்னும் நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மக்களுக்கு பயன்படும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களில் இதுவும் ஒன்று.
TN Job “FB Group” Join Now
2021 – 2022 நிதிநிலை அறிக்கையில், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து கடந்த மே 1ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு முதல் கட்டமாக சமையல் எரிவாயு வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 10 ஆம் தேதி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் இலவச சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். மேலும் இந்த திட்டத்தின் மூலம் 20 லட்சம் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.