தமிழகத்தில் காவலர்களுக்கு இலவச பஸ் பாஸ் – போக்குவரத்து துறை கடிதம்!
தமிழக காவல்துறையினர் சென்னையில் குளிர்சாதன பேருந்து தவிர மற்ற பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச பயணம்:
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் காவலர் அடையாள அட்டையைக் காண்பித்து இலவசமாக பயணம் செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. வாரண்ட்டுகள் இருந்தால் அரசு பேருந்துகளில் காவலர்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். காவல்துறைக்கு அனுப்பப்படும் மொத்த ரசீதுகள் மூலம் காவல்துறையில் இருந்து போக்குவரத்துத்துறை பணம் வசூலித்து வந்தது. இந்நிலையில் வாரண்ட் இல்லாமல் பயணம் செய்யும் காவலர்கள் டிக்கெட் எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர் வங்கிக்கணக்கில் தலா ரூ.1,100 – முதல்வரின் புதிய திட்டம்!
இது காவலர்களிடையே கடும் எதிர்ப்பை பெற்று வந்தது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில், காவலர்களுக்கு பல்வேறு சலுகைகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதை தொடர்ந்து இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரை அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம். அதற்கு காவலர் அடையாள அட்டை வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்தார். எனவே காவலர்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை அமல்படுத்துவதற்கு பேருந்தில் பயணம் செய்யும் காவலர்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்களை அனுப்ப போக்குவரத்துத் துறை துணைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர்க்கு சூப்பர் அறிவிப்பு – கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு!
அதனை தொடர்ந்து சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் காவலர்கள் இலவசமாக பயணம் செய்ய ஏதுவாக இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான காவல்துறையினரின் விவரங்களை பட்டியலிட்டு அனுப்ப டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் சென்னையில் குளிர்சாதன பேருந்து தவிர மற்ற பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என கூறப்படுகிறது. மற்ற பகுதிகளில் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காவலர்களும் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.