திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர்க்கு சூப்பர் அறிவிப்பு – கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு!
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், நேரடி தரிசன டிக்கெட்கள் வழங்குவது குறித்தும் இன்னும் 3 நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி தரிசனம்:
ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படும். இத்திருத்தலத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த வருடம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றால் திருப்பதியில் பக்தர்கள் வருகை மறுக்கப்பட்டது. தற்போது ஆந்திர அரசின் முயற்சியால் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் முன்பதிவு அடிப்படையில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில் குடும்ப நிதியுதவி, ரூ.5 லட்சம் மதிப்புள்ள விருது – அரசாணை வெளியீடு!
மாதந்தோறும் கோயில் இணையதளம் மூலம் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது திருப்பதியில் தினமும் 30,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது திருப்பதியில் தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருவதால் மூன்று நாட்களுக்கு வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பதியில் வரும் பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், நேரடியாக வரும் பக்தர்களுக்கு தரிசன டோக்கன் அளிப்பது அல்லது ஆன்லைனில் டிக்கெட் வழங்குவது குறித்தும் 3 நாட்களில் அறிவிப்பு வெளியிட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாணவர்கள் கொண்டாட்டம்!
இது குறித்து பேசிய தேவஸ்தான அறங்காவலர் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து திருப்பதியில் பக்தர்களை அதிக அளவில் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகிறது. விரைவில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தரிசன டிக்கெட்டுகளை நேரடியாக திருப்பதியில் வழங்குவதா அல்லது ஆன்லைன் மூலம் வெளியிடுவதா என்பதை ஆலோசனை நடத்தி அர்ச்சனை போன்ற ஆர்ஜித் சேவைகளில் பக்தர்களை அனுமதிப்பது குறித்தும் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.