அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர் வங்கிக்கணக்கில் தலா ரூ.1,100 – முதல்வரின் புதிய திட்டம்!

0
அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர் வங்கிக்கணக்கில் தலா ரூ.1,100 - முதல்வரின் புதிய திட்டம்!
அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர் வங்கிக்கணக்கில் தலா ரூ.1,100 - முதல்வரின் புதிய திட்டம்!
அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர் வங்கிக்கணக்கில் தலா ரூ.1,100 – முதல்வரின் புதிய திட்டம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் வங்கிக்கணக்கில் தலா ரூ.1,100 செலுத்தும் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்து இருக்கிறார். அரசின் இந்த திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

புதிய திட்டம்:

உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் இலவசமாக சீருடை, காலணிகள், புத்தகப்பை போன்றவை வழங்கப்படும். ஆரம்பத்தில் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால் அரசு அளிக்கும் பொருட்களின் தரம் நிலைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் நிலவி வந்தது. தமிழக அரசும் இதேபோல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சீருடை, காலணி, புத்தகப்பை போன்றவற்றை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர்க்கு சூப்பர் அறிவிப்பு – கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு!

உத்தரபிரதேச மாநிலத்தில் இந்த பிரச்சனை குறித்து ஆலோசித்து அரசு புதிய முடிவு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி உத்தர பிரதேசத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகப்பை, காலணி வாங்க பெற்றோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார். அரசின் இந்த புதிய திட்டம் கடந்த நவம்பர் 6ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதனால் சுமார் 1.2 கோடிக்கும் அதிகமான மாணவர்களின் பெற்றோரின் வங்கிக் கணக்கில் தலா ரூ.1,100ஐ அரசு செலுத்தியுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாணவர்கள் கொண்டாட்டம்!

அரசின் இந்த புதிய திட்டம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக உத்தரபிரதேச மாணவரின் பெற்றோர் அமீனா பானோ என்பவர், தனது குழந்தைகள் 4, 8ம் வகுப்பு படித்து வருவதாகவும் முன்பு பள்ளிகளில் வழங்கப்பட்ட சீருடை தரமற்று இருந்ததாகவும் தற்போது அரசு நேரடையாக பணத்தை செலுத்தி இருப்பதால் சீருடை, புத்தகப்பை, காலணி போன்றவற்றை தரமாக வாங்க முடிந்ததாகவும் அரசின் புதிய திட்டத்தை வரவேற்பதாகவும் கூறியுள்ளார். இருப்பினும், அரசு வழங்கும் தொகையை உயர்த்தி வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும் பல பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!