இலவசமாகவே ஆதாரை அப்டேட் செய்ய வேண்டுமா? மார்ச் 14 கடைசி நாள்!! உடனே பண்ணுங்க!!
மார்ச் 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் போர்ட்டல் மூலமாக இலவசமாகவே ஆதார் கார்டை அப்டேட் செய்து கொள்ளலாம்.
ஆதார் அப்டேட்:
இந்திய குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் கார்டு விளங்கி வருகிறது. அதாவது, ஆதார் கார்டை வைத்தே ஒரு குடிமகனும் அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளலாம். அதனால், தான் மத்திய அரசு பான் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களிலும் இணைக்கும்படி வலியுறுத்தி வருகிறது. குறைந்தது, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆதார் கார்டில் இருக்கும் புகைப்படம், முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை அப்டேட் செய்திருக்க வேண்டும்.
அதாவது, வேலை நிமித்தம் காரணமாக வெளியூரில் குடியேறினால் கூட கட்டாயமாக அந்த முகவரியை ஆதார் கார்டில் அப்டேட் செய்திருக்க வேண்டும். மேலும், குடிமக்கள் மார்ச் 14 ஆம் தேதி வரையிலும் myAadhaar போர்ட்டல் மூலமாக இலவசமாகவே அப்டேட் செய்துகொள்ளலாம். அதற்கு பிறகு நீங்கள் பெறும் சேவைக்கு தகுந்தாற்போல கட்டணம் செலுத்த வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான காலியிட விவரங்கள் – கவனத்தில் கொள்ளுமா அரசு!