திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தேவஸ்தானம் சூப்பர் அறிவிப்பு!
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தற்போது இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பரவல் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் தேவஸ்தானம் பக்தர்களுக்கு பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது. பக்தர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பக்தர்கள் கவனத்திற்கு
ஆந்திர மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வருகை புரிவார்கள். அதனால் கொரோனா கால கட்டத்தில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தேவஸ்தானம் அறிவித்தது. இதில் குறிப்பாக நேரடி தரிசன டிக்கெட்டு வழங்குவது ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் முறையில் குறிப்பிட்ட அளவு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டது. இந்த டிக்கெட் வெளியான சில நிமிடங்களில் பக்தர்கள் முன்பதிவு செய்வதால் கிராமப்புற மக்களுக்கு டிக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்தது.
ஏப்ரல் மாதத்தில் மட்டுமே வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை – RBI அறிக்கை!
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைந்து கொண்டு வருகிறது. அதனால் பக்தர்களுக்கு பல்வேறு தளர்வுகளை தேவஸ்தானம் அறிவித்து வருகிறது. இதில் குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இலவச தரிசனம் டிக்கெட்களை வழங்கி வருகிறது. இதனால் தற்போது பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது கூடுதல் தளர்வுகள் பக்தர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 மார்ச் 20ம் தேதி கோவில் வளாகத்தில் பக்தர்கள் கட்டண சேவைகளில் பங்கு பெறவும், அங்கப்பிரதட்சணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் பொறியியல் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்கள் கவனத்திற்கு – AICTE முக்கிய உத்தரவு!
தற்போது ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டண சேவைகளில் பங்கு பெறவும், அங்கப்பிரதட்சணம் செய்யவும் அனுமதிக்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதன்படி 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இவை தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் பி.ஏ.சி.-1 ஹால் கவுண்டரில் பக்தர்களுக்கு இலவச அங்கப்பிரதட்சணத்திற்கான டிக்கெட்டுகளையும் வழங்க உள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த இலவச டிக்கெட்டை பெற்றவர்கள் அடுத்த நாள் காலையில் கூட அங்கபிரதட்சனம் மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.