தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு – ஆசிரியர்கள் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் கோடைகாலம் காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோடை விடுமுறை தினத்தில் மாணவர்களை எப்படி பார்த்து கொள்ள வேண்டும் என்று பெற்றோர்களுக்கு நாமக்கல் மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர் கூறியதை பற்றி விரிவாக பார்ப்போம்.
கோடை விடுமுறை
தமிழகத்தில் கொரோனா காரணமாக இந்த கல்வியாண்டு தாமதமாக தொடங்கப்பட்டது. அதனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் குறைவாக நடைபெற்றது. அதனால் மே மாதம் முழுவதும் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் கோடைகாலம் காரணமாக பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. அதனால் மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.
Exams Daily Mobile App Download
அதன்படி 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை இன்று முதல் தொடங்கியுள்ளது. இதையடுத்து கோடைவிடுமுறையில் மாணவர்களை எப்படி பார்த்து கொள்ள வேண்டும் என்று பெற்றோர்களுக்கு நாமக்கல் மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர் கூறியதை பற்றி விரிவாக பார்ப்போம். கோடை விடுமுறை தினத்தில் குறிப்பாக கிராமப்புற வாழ் மக்கள் தங்களின் பிள்ளைகள் நீர்நிலைகளில் குளித்து ஆட்டம் போடுவார்கள். இந்த சமயத்தில் உங்களின் குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சில சமயங்களில் அவர்கள் இறக்கக்கூட நேரிடும்.
மேலும் குறிப்பாக பெண் குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்வது அவசியமானதாகும். தற்போது பல இடங்களில் பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். அதனால் சிறுமிகள் யாருடன் பேசுகிறார்கள் , எங்கு இருக்கிறார்கள், எப்படி நடந்து கொள்கிறார்கள் உள்ளிட்டவைகளை கண்காணித்து கொண்டு இருக்க வேண்டும். அத்துடன் மாணவர்கள் அதிகமாக மொபைல் பயன்படுத்துவது, தொலைக்காட்சி பார்ப்பதை கண்டிக்க வேண்டும். அவர்களின் எதிர்கால கனவுகளை பற்றியும் ஆசைகளை பற்றியும் கேட்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை மாவட்டத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.