PM KISAN திட்ட விவசாயிகள் கணத்திற்கு – eKYC செயல்முறையை முடிக்க நாளை கடைசி நாள்!
PM KISAN திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் 12 ஆவது தவணையை பெற வேண்டும் என்று விரும்பினால் கட்டாயமாக eKYC செயல்முறையை முடித்திருக்க வேண்டும். மேலும், eKYC செயல்முறையை முடிக்க நாளை தான் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
PM KISAN:
இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகள் அனைவருக்கும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் மூலமாக நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படுகிறது. அதாவது, ஒரு வருடத்திற்கு PM கிசான் திட்டத்தின் மூலமாக ரூ.6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும், இது வரைக்கும் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு 11 தவணைக்கான நிதியுதவி வந்தடைந்துவிட்டது.
செப்டம்பர் மாதத்தில் “இத்தனை” நாட்கள் வங்கி விடுமுறையா? தெரிஞ்சுக்காம இருக்காதிங்க!
இந்நிலையில், 12 ஆவது தவணைக்கான நிதியுதவியை எதிர்பார்த்து விவசாயிகள் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும், 12 ஆவது தவணைக்கான நிதியுதவியை வழங்குவதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது, PM கிசான் திட்டத்துடன் விவசாயிகள் கட்டாயமாக ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் eKYC செயல்முறையை முடித்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே 12 ஆவது தவணைக்கான நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், eKYC செயல்முறையை முடிக்க நாளை தான் கடைசி நாள் என்பதால் அதற்குள் அப்டேட் செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எப்படி eKYC செயல்முறையை முடிப்பது என்பதை பார்க்கலாம். முதலில், PM கிசானின் அதிகாரபூர்வமான pmkisan.nic.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று Farmers Corner என்கிற பகுதிக்கு கீழுள்ள eKYC என்பதை கிளிக் செய்யவும். பின்னர், OTP அடிப்படையிலான eKYC பிரிவில் ஆதார் எண்ணை பதிவு செய்யவும். பின்னர், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அந்த OTP எண்ணை பதிவு செய்துவிட்டால் eKYC செயல்முறையை முடித்துவிடலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்