தமிழகத்தில் முகூர்த்த தினத்தையொட்டி பூக்களின் விலை கடும் உயர்வு – முழு விவரம் இதோ!!

0
தமிழகத்தில் முகூர்த்த தினத்தையொட்டி பூக்களின் விலை கடும் உயர்வு - முழு விவரம் இதோ!!

தமிழகத்தில் மழை மற்றும் வெள்ளத்தினால் பூக்களின் விளைச்சல் பாதிப்படைந்தது. தற்போது பூக்களின் விலை அனைத்தும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பூக்களின் விலை:

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களுமே அதிக கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட நிலையில் விளைச்சல் கடுமையாக சரிவடைந்து பூக்களின் விலை உயர்வடைந்துள்ளது. அந்த வகையில், தை மாதம் முதல் முகூர்த்த நாட்கள் தொடர்ந்து வரும் நிலையில் மல்லிப்பூ, பிச்சிப்பூ, ரோஜா, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

அதாவது, மல்லிப்பூ கிலோ ரூ. 6000-க்கும், பிச்சிப்பூ கிலோ ரூ.2500 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முகூர்த்த தினத்தை ஒட்டி பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த தை மாதம் முழுவதும் அதிகளவில் முகூர்த்த தினம் இருக்கும் என்பதனால் இந்த மாதம் முழுவதும் பூக்களின் விலை தொடர்ந்து உயரவே செய்யும் எனவே வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை – வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!