மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – பிட்மென்ட் காரணி உயர்வு? முழு விவரம் இதோ!
மத்திய அரசு பணியாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.26,000 ஆகவும், ஃபிட்மென்ட் காரணியை 3.68 ஆகவும் உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
பிட்மென்ட் காரணி
கடந்த 18 மாத அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகையை எதிர்பார்த்து வரும் மத்திய அரசு ஊழியர்கள், பிட்மென்ட் காரணியை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் மிக விரைவில் இது தொடர்பான சில நல்ல செய்திகள் வெளியாகும் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இப்போது அரசு ஊழியர்களுக்கு ஃபிட்மென்ட் காரணி உயர்த்தப்பட்டால் சம்பளமும் கணிசமாக உயரும். அந்த வகையில் பிட்மென்ட் காரணியை உயர்த்துவதற்கு அரசாங்கம் விரைவில் ஒப்புதல் அளிக்கக்கூடும் என்று பல ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
TNPSC முக்கிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே..!
இதற்கிடையில், குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18,000 ஆக உயர்த்தி ரூ.26,000 ஆகவும், ஃபிட்மென்ட் காரணியை 2.57 மடங்கில் இருந்து 3.68 ஆகவும் உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன. மத்திய பணியாளர்கள் தற்போது 2.57 சதவீதம் என்ற அடிப்படையில் ஃபிட்மென்ட் காரணியின் கீழ் சம்பளம் பெறுகின்றனர். இது 3.68 சதவீதமாக உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.8,000 ஆக உயரும். அதாவது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 லிருந்து ரூ.26,000 ஆக உயர்த்தப்படும்.
தமிழகத்தில் 9ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – TRUST தேர்வு அறிவிப்பு!
இப்போது 7வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஃபிட்மென்ட் காரணியை 3.68 ஆக உயர்த்தினால், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.26,000 ஆகிவிடும். தற்போது, ஒரு ஊழியரின் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 18,000 என்றால், அலவன்ஸ்கள் தவிர்த்து, 2.57% ஃபிட்மென்ட் காரணியின்படி ரூ.46,260 பெறமுடியும். அதே நேரத்தில் ஃபிட்மென்ட் காரணி 3.68 ஆக இருந்தால் சம்பளம் ரூ. 95,680 (26000X3.68 = 95,680) ஆக இருக்கும். இதற்கிடையில், ஜூன் 2017ல் வெளியிடப்பட்ட 34 மாற்றங்களுடன் தொடக்க நிலை ஊழியர்களுக்கு மாதத்திற்கு ரூ.7,000 லிருந்து ரூ.18,000 ஆகவும், உயர்நிலையில் அதாவது செயலர் பதவியில் உள்ள ஊழியர்களுக்கு ரூ.90,000 லிருந்து ரூ.2.5 லட்சமாகவும் சம்பள உயர்வு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.