விமான நிலையங்களில் கொரோனா விதிமுறை மீறல் – அபராதம் விதிக்க முடிவு!!
விமான நிலையங்களில் கொரோனா விதிமுறையை கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனா விதிமுறையை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விமான நிலையங்களில் விதிமுறை
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை வீசிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸால் தாக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் இருந்தது போலவே இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரமாக உள்ளது.
TN Job “FB Group” Join Now
அதேபோல் ஒவ்வொரு மாநிலங்களிலும் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் அம்மாநில அரசுகள் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி மத்திய அரசும் மக்கள் கூடுவதற்கும், பண்டிகைகளை கொண்டாடுவதற்கும் சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதே நேரத்தில் கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கலாமா என்றும் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் வௌவாலிலிருந்து பரவியது – மருத்துவ நிபுணர் குழு சான்று!!
இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் அனைத்து விமான நிலையங்களிலும் கொரோனா விதிமுறையை முறையாக கடைபிடிக்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. விமான நிலையங்களில் கொரோனா விதிமுறையை சரியாக கடைபிடிக்காதவர்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் சார்பில் அனைத்து விமான நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.