மாநிலத்தில் மீண்டும் இரவு ஊரடங்கு அமல்? முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் – அரசின் அறிவிப்புகள்!
டெல்லியில் கொரோனா பாதிப்புகள் குறைந்து உள்ளதை அடுத்து அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வந்த கோரிக்கைகளை அடுத்து தற்போது அரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில், நகரில் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
டெல்லியில் வியாழக்கிழமை நிலவரப்படி கொரோனா தொற்று பாதிப்புகள் புதிதாக 556 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 6 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் கோவிட் நேர்மறை விகிதம் 1.10% ஆக குறைந்துள்ளது. அங்கு தொற்றுநோய் நிலைமை கட்டுக்குள் இருப்பதால் டெல்லியில் இரவு ஊரடங்கு இருக்காது என்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. ஏப்ரல் முதல் பள்ளிகள் கட்டாயமாக நேரடி முறையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு – தமிழில் கையெழுத்திடும் முறை அமல்!
தற்போது டெல்லியில் இரவு ஊரடங்கு உட்பட அனைத்து தடைகளும் நீக்கப்பட்டுள்ளன. முகக்கவசம் அணியாதவர்களுக்கு முன்னதாக விதிக்கப்பட்டிருந்த அபராதம் ₹2,000ல் இருந்து ₹500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அங்கு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ஓமைக்ரான் பரவல் உச்சத்தில் இருந்த போது சில வாரங்களுக்கு வார இறுதி ஊரடங்கு விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரசின் அதிரடி அறிவிப்பு!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கொரோனா கால தடைகள் நீக்கப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் முறையாக கடிபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும்,இதனை அரசு கண்டிப்பாக கண்காணிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் நடத்திய கூட்டத்தில் மேலும் பல அறிவிப்புகளும் வெளியிடப்பட்டது அதன்படி, கார்களில் தனியாக ஓட்டுபவர்கள் இனி கட்டாயமாக முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டது.