தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு – தமிழில் கையெழுத்திடும் முறை அமல்!
தமிழகத்தில் மாணவர்கள் உட்பட அனைவரும் தமிழில் கையெழுத்திடும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடக்க பள்ளிகளுக்கு, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழில் கையெழுத்திடும் முறை அமல்:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த 2 வருடங்களாக திறக்கப்படாமல் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. கடந்த நவம்பர் மாதம் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டது. இருப்பினும் மீண்டும் கொரோனா எழுச்சி தீவிரமடைந்தால் ஜனவரி மாதம் பள்ளி மூடப்பட்டது. இதனால் மாணவர்களின் நேரடி கல்விமுறை பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இது குறித்து ஆலோசித்து பள்ளி கல்லூரிகள் பிப் 1 முதல் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு அனைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளது
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி (DA) உயர்வு? 7வது ஊதியக்குழு பரிந்துரை!
அதன் அடிப்படையில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, தொடக்கக் கல்வி முதல் கல்லூரி வரை, மாணவர்களின் பெயரில் தமிழை சேர்ப்பது சிறப்பானது என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தங்களது பெயரை தமிழில் எழுதும்போது, அதன் முன் எழுத்து இனிஷியலையம் தமிழில் எழுதும் நடைமுறையை அன்றாட வாழ்வில் கொண்டு வர வேண்டும். ஏனென்றால் நாம் பெயரை தமிழ் மொழியில் எழுதினாலும், இனிஷியலை ஆங்கிலத்தில் தான் எழுதி வருகிறோம்.
நடந்தேறிய கோபி, ராதிகா திருமணம் – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அதிரடி திருப்பம்! ரசிகர்கள் ஷாக்!
இதை தவிர்க்கும் விதமாக மாணவர்கள் பள்ளியில் சேர அளிக்கும் விண்ணப்பம், வருகை பதிவேடு, பள்ளி, கல்லுாரிகளில் படிப்பை முடித்து பெறும் சான்றிதழ்கள் வரை, அனைத்திலும் தமிழ் முன் எழுத்துடன் வழங்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டும். இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்கள் கையெழுத்துகளை தமிழ் முன் எழுத்துக்களுடன் கையெழுத்து இடவும் அறிவுறுத்தப்படுகிறது. எனவே பள்ளி கல்வி அலுவலர்கள், அனைத்து வகை தொடக்க கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளிலும் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.