அரசு ஊர்தி ஓட்டுநர்களுக்கு தர ஊதியம் – நிதி தணிக்கை இயக்ககம் உத்தரவு!

0
அரசு ஊர்தி ஓட்டுநர்களுக்கு தர ஊதியம் - நிதி தணிக்கை இயக்ககம் உத்தரவு!
அரசு ஊர்தி ஓட்டுநர்களுக்கு தர ஊதியம் - நிதி தணிக்கை இயக்ககம் உத்தரவு!
அரசு ஊர்தி ஓட்டுநர்களுக்கு தர ஊதியம் – நிதி தணிக்கை இயக்ககம் உத்தரவு!

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு ஊர்தி ஓட்டுநர் பணியில் நெடு நாட்களாக பணி செய்து இளநிலை உதவியாளர் பதவிக்கு உயர்வு பெறாமல், ஓட்டுநர் நிலையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் நபர்களுக்கு தர ஊதியம் ரூ.4,200 வழங்க தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஊதியம்

தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊர்தி ஓட்டுநர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி 1 வரையும், ஜனவரி 1, 2006 முதல் மே 31, 2009 வரையிலும் உள்ள காலங்களில் தேர்வு நிலை அடைந்தவர்களுக்கு திருத்த ஊதிய விகிதம் 2009ன் கீழ் ரூ.4,200 தர ஊதியமாக வழங்க தெளிவுரை வழங்கப்பட்டு நிதி தணிக்கை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஜூலை 28 இல் அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் அறிவிப்பு!

அதே நேரத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியிடப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி ஊர்தி ஓட்டுநர் பணியில் இருந்து இளநிலை உதவியாளர் பதவிக்கு உயர்வு பெறாமல், ஓட்டுநர் நிலையிலேயே ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு தேர்வு நிலையில் ரூ.4,200 தர ஊதியமாக வழங்கவும் அனுமதி கொடுக்கப்படுவதாக உள்ளாட்சி நிதி தணிக்கை இயக்ககத்தின் கடிதம் தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

தவிர ஈப்பு ஓட்டுநர்களுக்கு பணி மாறுதல் அடிப்படையில் இளநிலை உதவியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, தமிழ்நாடு அமைச்சுப் பணிகளுக்கான சிறப்பு விதிகளில் முரண்பாடு ஏற்படும் என்பதால் அதற்கான வாய்ப்புகள் இல்லை என சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!