தமிழகம் முழுவதும் ஜூலை 28 இல் அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் அறிவிப்பு!
தமிழகத்தில் அதிமுகவினர், திமுகவை எதிர்த்து வரும் ஜூலை 28ம் தேதி மாநில அளவிலான போராட்டத்தை நடத்த இருப்பதாக அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தெரிவித்துள்ளனர்.
அதிமுக போராட்டம்:
தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்து வருகின்றன. இரு கட்சிகளும் பெருபான்மை பெற்ற கட்சியாக உள்ளது. கடந்த வருடத்தில் அதிமுக ஆட்சியில் அம்மாவின் மறைவிற்கு பிறகு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வர், துணை முதல்வர் பதவி வகித்தனர். அதே போல் திமுக ஆட்சியில் கலைஞர் மறைவுக்கு பிறகு தற்போது முக ஸ்டாலின் முதல்வர் பதவி வகிக்கிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வினர் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் அதிகாரம் பெற்றனர்.
தமிழகத்தில் RTE மாணவர் சேர்க்கை – 48 ஆயிரம் மாணவர்கள் பதிவு!
அதனை தொடர்ந்து எதிர்க்கட்சி அங்கீகாரம் பெற்றனர். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். மேலும் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று மக்களிடம் இருந்து மனுக்களையும் சேகரித்தார். ஆட்சிக்கு வந்த பிறகு மக்களின் கோரிக்கைகள், அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் 5 வாக்குறுதிகளில் கையெழுத்திட்டு திட்டமாக செயல்படுத்தினார்.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் திமுக அரசு அதிமுகவை எதிர்த்து பொய் வழக்கு தொடர்வதாகவும், தேர்தலில் அளித்த வாக்குறுதியான நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் & டீசல் விலை குறைப்பு போன்றவற்றை நிறைவேற்றவில்லை அதிமுகவினர் குற்றம் சாட்டி உள்ளனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 28 ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.