தமிழகத்தில் RTE மாணவர் சேர்க்கை – 48 ஆயிரம் மாணவர்கள் பதிவு!
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 1.12 லட்சம் இடங்கள் உள்ளன. அதில் இதுவரை 48,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கல்வி உரிமைச்சட்டம்:
தமிழகத்தில் அனைவரும் கல்வி பெறும் நோக்கில் அரசு ஏராளமான நலத்திட்டங்களை செய்து வருகிறது. அனைத்து மாணவர்களும் கட்டாயம் கல்வி பெற வேண்டும் என்பதையே அரசு இலக்காக கொண்டுள்ளது. மேலும் தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களுக்கு கல்வியில் முன்னுரிமையும், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடும் அளித்து வருகிறது. அந்த வகையில் தாழ்த்தப்பட்ட பிரிவினை சேர்ந்த மக்களுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு அளித்து வருகிறது. அதன் படி 2021-22ம் கல்வியாண்டிற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் சம்பளம், ஓய்வூதியம், EMI செலுத்துதலுக்கான புதிய விதிகள் – RBI அறிவிப்பு!
கடந்த 5ம் தேதி முதல் இணையதளம் வாயிலாகவும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலும் பதிவு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் அரசின் செலவில் தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் வாய்ப்பை பெறுகின்றனர். எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை ஆக கூடிய முழு செலவையும் அரசே ஏற்கிறது. தமிழகத்தில் மொத்தம் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 1.12 லட்சம் இடங்கள் உள்ளன.
TN Job “FB Group” Join Now
இதில் கல்வி பெறும் விருப்பமுள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் மாத வருமானம் லட்சத்துக்கும் கீழ் இருக்க வேண்டும் தேர்தெடுக்கப்படும் பள்ளி மாணவரின் இருப்பிடத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் இருக்க வேண்டும். மேலும் எல்.கே.ஜி சேரும் மாணவருக்கு 31.07.2021 அன்று 3 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும் என நிபந்தனைகள் உள்ளது. ஜூலை 5ம் தேதி தொடங்கிய மாணவர் சேர்க்கையில் தற்போது வரை 48,000 பேர் கட்டாய கல்வி உரிமை சட்டம் கீழ் கல்வி பயில விண்ணப்பித்துள்ளனர் எனவும், வரும் ஆகஸ்ட் 3ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Rte நீடிக்க வேண்டும்.