பட்ஜெட் 2023-24: ஆலோசனைக் கூட்டம் இன்று தொடக்கம் – பிப்ரவரி 1ம் தேதி தாக்கல்!
நாட்டில் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பிற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது. இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட்:
இந்தியாவில் ஆண்டுக்கு 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அந்த வகையில் வருகிற 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை தயார் செய்வதற்கு இன்று நிதியமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் பருநிலை மாற்றம், உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
Exams Daily Mobile App Download
மேலும் நாட்டில் இருக்கும் பல்வேறு துறைகளில் இருக்கும் குறைகளை கேட்டறிந்து தீர்வு காணுவதற்கு பல்வேறு தொழிற்துறையைச் சேர்ந்தவர்கள், உள்கட்டமைப்புத் துறையினர் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இதையடுத்து வேளாண்துறை, நிதித்துறை, உணவுப் பதப்படுத்துதல் துறை, மூலதனத்சந்தை ஆகிய துறை சேர்ந்தவர்களுடன் நாளை நிதியமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.
விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ஆதார் எண் இணைப்பு அவசியம்? – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதே போன்று 24ம் தேதி அன்று சேவைத்துறையின் பிரதிநிதிகள், வர்த்தக அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், சமூகநீதித்துறை வல்லுநர்கள், சுகாதாரத்துறை, கல்வித்துறை ஆகிய துறை சேர்ந்த வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதன்படி இது போன்று பல்வேறு துறையினரிடம் ஆலோசனை பெற்று வருகிற 2023ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி அன்று பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.