அரசு ஊழியர்கள் சம்பளம் குறைப்பு? நிதி அமைச்சர் விளக்கம்!
கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி:
உலகம் முழுவதும் கொரோனா தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் 10 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு 2,000 ரூபாய் நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்றினை கட்டுப்படுத்த மற்றும் நிவாரணம் வழங்குவதற்காகவும் இதுவரை 700 பில்லியன் ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டதாக இலங்கை நிதி அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார்.
இன்று முதல் 2 நாட்களுக்கு இரவு ஊரடங்கு நீக்கம் – மாநில அரசு அறிவிப்பு!
மேலும் RT-PCR, ஆன்டிஜென் பரிசோதனை, புதிய சிகிச்சை மையங்கள் கட்டுதல் என நிதி செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த 56 பில்லியன் ரூபாயும் பொதுமக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாடு நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையிலும் அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகளை குறைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
நிதி நெருக்கடியின் காரணமாக அரசு அதிகாரிகளின் சம்பளம் குறைக்கப்படுமோ என்ற கவலை எழுந்து வந்த நிலையில் இந்த அறிவிப்பானது பெரும் நிம்மதியை அளித்துள்ளது. கொரோனா தொற்றால் ஊரடங்கு விதிக்கப்பட்டதால் நாட்டின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவியுள்ளது. 30 ஆண்டுகால போரின் போது இது போன்ற நெருக்கடி ஏற்படவில்லை என்றும் முன் இலங்கையை ஆட்சி செய்த எந்த ஒரு அரசும் இத்தகைய நெருக்கடியை சந்தித்திருக்காது என்றும் இலங்கை நிதி அமைச்சர் கூறியுள்ளார்.