இன்று முதல் 2 நாட்களுக்கு இரவு ஊரடங்கு நீக்கம் – மாநில அரசு அறிவிப்பு!

0
இன்று முதல் 2 நாட்களுக்கு இரவு ஊரடங்கு நீக்கம் - மாநில அரசு அறிவிப்பு!
இன்று முதல் 2 நாட்களுக்கு இரவு ஊரடங்கு நீக்கம் - மாநில அரசு அறிவிப்பு!
இன்று முதல் 2 நாட்களுக்கு இரவு ஊரடங்கு நீக்கம் – மாநில அரசு அறிவிப்பு!

உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று (ஆகஸ்ட் 30) கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அம்மாநில கூடுதல் தலைமை செயலாளர் அறிவித்துள்ளார்.

ஊரடங்கு ரத்து

கொரோனா 2 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகளாக உத்திரபிரதேச மாநிலம் முழுவதும் தற்போது இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் ஆண்டு தோறும் கோலாகமாக கொண்டாடப்பட்டு வரும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று (ஆகஸ்ட் 30) கொண்டாடப்பட உள்ளது. அதற்காக இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 30,31) 2 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்துவதாக அறிவித்துள்ளது.

கொரோனோவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு – சிறப்பு முகாம்!

இது தொடர்பாக அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி வெளியிட்டுள்ள உத்தரவில், ‘உத்திரபிரதேச மாநிலத்தில் ஜன்மாஷ்டமி தினத்தன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் பொது மக்களின் வருகை அனுமதிக்கப்படுகிறது. அதனால் இரவு ஊரடங்கு உத்தரவில் இருந்து 2 நாட்களுக்கு பொது விலக்கு அளிக்கபடுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அம்மாநிலத்தில் தினசரி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனிடையே 2 நாட்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வில் உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் சிறைகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா முழு உற்சாகத்துடன் கொண்டாடப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. எஎனினும் கொண்டாட்டங்களின் போது கொரோனா தடுப்பு தொடர்பிலான அனைத்து நெறிமுறைகளையும் மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதனுடன் விழா கொண்டாடப்படும் அனைத்து முக்கிய பகுதிகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டும், சமூக இடைவெளியை உறுதி செய்ய வேண்டும், வாகனங்களில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், உத்தரபிரதேசத்தில் நேற்று (ஆகஸ்ட் 29) ஒரு நாளில் மட்டும் 14 புதிய பாதிப்புகளுடன், இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!